திருக்குறள்

193.

நயனில னென்பது சொல்லும் பயனில பாரித் துரைக்கும் உரை.

திருக்குறள் 193

நயனில னென்பது சொல்லும் பயனில பாரித் துரைக்கும் உரை.

பொருள்:

பயனற்றவைகளைப்பற்றி ஒருவன் விரிவாகப் பேசிக் கொண்டிருப்பதே அவனைப் பயனற்றவன் என்று உணர்த்தக் கூடியதாகும்.

மு.வரததாசனார் உரை:

ஒருவன் பயனில்லா பொருள்களைப் பற்றி விரிவாகச் சொல்லும் சொற்கள், அவன் அறம் இல்லாதவன் என்பதை அறிவிக்கும்.

சாலமன் பாப்பையா உரை:

பயனற்ற சொற்களை விரித்துப் பேசும் ஒருவன் பேச்சு அவன் நீதியற்றவன் என்பதைக் காட்டிவிடும்.